Breaking News

எழுத படிக்க தெரிந்தா போதும் சென்னையில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள  சமையலர் பணியிடங்கள் மற்றும் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 


பதவியின் பெயர்:

1. சமையலர் பதவி வேலை

2. துப்புரவுப் பணியிடங்கள் 


கல்வி தகுதிகள்:

விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பம் கிடைக்கும் இடம்:

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்

மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து நேரடியாக அல்லது தபால் மூலமாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

01.12.2020

 

மேலும் விவரங்களுக்கு;

https://chennai.nic.in/applications-are-invited-for-the-post-of-cook-and-cleaner-in-adi-dravidar-welfare-department/

 https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/11/2020111766.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback