Breaking News

நிவர் புயல் தற்போது எங்கே உள்ளது? எப்போது கரையை கடக்கும் ? எங்கு கரையை கடக்கும்? எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்

அட்மின் மீடியா
0

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது 



இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்த நிவர் புயல் கடந்த சற்று முன்பு வெளியான தகவலின் படி சென்னையில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது


வங்கக் கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்.என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தற்போது மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தற்போது   கடலூரில் இருந்து 290 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 300 கிமீ, சென்னைக்கு 350 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.என்றும்

புயல் இன்னும் 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback