ரயில்கள் நாளையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து விரைவு ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிவர் புயல் உலுக்கி எடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கனமழை தொடருவதன் காரணமாக திருச்சி, குமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் 27 விரைவு ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்