நிவர் புயல் : சென்னை மவுண்ட் ரோடு தர்கா மேற்கூரை சரிந்தது
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள 'நிவர்' இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'நிவர்' அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, புதுச்சேரியில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையது மூஸா ஷா காதரி தர்காவின் மேற்கூரை சரிந்து விழுந்து சேதமடைந்தது.
சென்னையின் மிக முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவில் வழக்கமாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். ஆனால் கனமழை காரணமாக இன்று கூட்டம் குறைவாகவே இருந்ததால், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்