2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு வீடியோ!!
இத்தாலியின் தென்பகுதியில் கேம்ப்பானியா வட்டாரத்தில் நாபொலி வளைகுடாவில் அமைந்துள்ள சோம்மா-சுழல்வடிவ எரிமலை ஆகும்
இந்த எரிமலை கி.பி 79-ல் வெடித்து சிதறிய சீற்றத்தால் அருகில் இருந்த மொத்த நகரமும் மூழ்கியது. இந்த எரிமலைச் சீற்றம் பாம்பீ நகரத்தையும் அங்கு குடியிருந்த மக்களையும் உயிருடன் சாம்பலில் புதைத்துவிட்டது.
தற்போது அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போது அங்கு இரண்டு நபர்களின் எலும்பு எச்சங்களை கண்டெடுத்துள்ளனர். அவர்கள் எரிமலை வெடித்து சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடிய போது எரிமலை குழம்பால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்
மேலும் புதைந்துபோன இருவரில் ஒருவர் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டதாக இருக்கலாம் மற்றொரு மனிதர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்
Source:
Tags: வெளிநாட்டு செய்திகள்