Breaking News

FACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு கூடிய கூட்டம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  என்று  ஒரு  கொள்ளை அடிக்கவேண்டும்..மக்களின் பணத்தை அல்ல..மக்களின் மனதை.கோடான கோடி மக்களின் உள்ளத்தை கொள்ளை அடித்த யோகி ஆதித்யநாத்-க்கு கூடிய கூட்டம் இது.அதுவும் பீகாரில் என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

தற்போது பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பீகாரில்  கூடிய கூட்டம் என பரப்பபடும் செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

ஆனால் தற்போது கொரானா காலத்தில் இது போல் கூடமுடியாது என்று தெரிந்தும் பொய்யாக  ஷேர் செய்கின்றார்கள்


பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு பீகாரில் கூடிய கூட்டம் அல்ல

மாறாக கடந்த 2014-ல் கொல்கத்தாவில் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட Jana Chetana Sabha கூட்டம் ஆகும்

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback