Breaking News

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இனி இ-பாஸ் தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இனி இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 


கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

 

மேலும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் அனைத்தும் நவம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அதில்  மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே சரக்கு உள்ளிட்ட போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதுமட்டுமில்லாமல், இதற்காக எவ்வித அனுமதியோ, இ-பாஸ் உள்ளிட்டவையோ தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback