திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
அட்மின் மீடியா
0
அக்.15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அறிவிப்பு
- திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
- ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
- சினிமா தியேட்டர்களில், ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்
- அனைவரும் மாஸ்க் அணிந்தபடி படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்
- தியேட்டர் உள்ளே பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்கு தீனிக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்
- திரையரங்கிற்கு வருபவர்கள் அனைவருக்கும் ஆரோக்ய சேது என்ற செயலியை தங்களின் மொபைலில் பதிவிறக்கம் கட்டாயம் செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்