Breaking News

அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பு உயர்வு

அட்மின் மீடியா
0

 அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்வு!



தமிழக அரசு சார்பில், சில பணிகளுக்கு, நேரடியாக நியமனம் நடக்கிறது. இந்தப் பணிகளில் சேர, குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக, 10ம் வகுப்புக்கு கூடுதலான கல்வி இருக்கக் கூடாது.

அதேபோல, இப்பணியில் சேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 30 ஆக இருந்தது.

தற்போது, வயது உச்ச வரம்பை, 32 ஆக உயர்த்தி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை, அரசாணை வெளியிட்டுள்ளது





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback