Breaking News

பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..! வீடியோ

அட்மின் மீடியா
0
ஹரியாணா மாநிலத்தில் வசித்து வரும் நிகிதா தோமர் என்ற 21 வயது இளம்பெண் ஃபரிதாபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் வணிகவியல் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். 


 

இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர்  தேர்வை எழுத நிகிதா தோமர் கல்லூரிக்குச் சென்றுள்ளார். தேர்வை எழுதிவிட்டு சுமார் 3.30 மணியளவில் தனது தோழியுடன் கல்லூரிக்கு வெளியே வந்தார்.

 

அப்போது காரில் வந்த இரண்டு இளைஞர்கள் கல்லூரிக்கு வெளியே வந்த  நிகிதா தோமரை வழிமறித்து  காரில் ஏற்ற முயற்சி செய்தனர். இதற்கு சம்மதிக்க மறுத்ததால்  இரண்டு பேரில்  ஒருவர் நிகிதாவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.

காயமடைந்த அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். மேலும் இருவர் கைது செய்யபட்டுள்ளனர் கல்லூரி மாணவி  துப்பாகியால் சுடப்பட்ட  வீடியோ வைரலாகி வருகின்றது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback