6 மாவட்டங்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு, திருப்பூர்,திண்டுக்கல்,கரூர், நாமக்கல், பெரம்பலூர்,திருச்சி, கடலூர்,அரியலூர், மற்றும் புதுவை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்