அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இனி வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
அரசு அலுவலங்கள் கொரானா காலத்தில் நீண்ட காலமாக மூடிக் கிடந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இயங்கிவந்தன.
தற்போது இந்த விதிமுறை மாற்றப்பட்டு, மீண்டும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் முழு அளவில் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்