Breaking News

FACT CHECK; எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் இறந்து விட்டார் என மீண்டும் பரவும் வதந்தி

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் பலரும்  பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் இறந்து விட்டார் என்று புதிய தலைமுறை டெப்ளட் புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இதே போல் வதந்தி சில நாட்களுக்கு முன்பும் பரவியது 

எஸ்.பி பால சுப்ரமணியன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் கடந்த வாரம் அவருக்கு கொரானா தொற்று குணமடைந்து நலமுடன் உள்ளார் என செய்திகள் வந்தது 

மேலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சப்படும் நிலை இல்லை எனவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார்

தற்போதைய நிலை


நேற்று இரவு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிவித்தது 

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாக அந்த மருத்துவமனை கூறியுள்ளது.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் திரைபிரபலங்கள் மற்ரும் ரசிகர்கள் உறவினர்கள் பலர் எஸ்.பி.பி.க்கான பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளார்கள்  

தற்போது 25.09.2020 காலை 8.42 மணிவரை எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் உயிரோடுதான் உள்ளார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback