BREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு
அட்மின் மீடியா
0
அக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசுஅறிவித்துள்ளது
அதன்படி, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள், விருப்பத்தின் பேரில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மேலும் தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம் என்றும், 50 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் தமிழக அரசு அந்த அறிவிப்பில் கூறியுள்ளனர்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்