Breaking News

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு: வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

அட்மின் மீடியா
0

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டது. 


மேலும் காய்கறி மார்க்கெட் திருமழிசை பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதியில் இயங்கி வந்தது.

இந்நிலையில் கோயம் பேடு காய்கறி மார்க்கெட் திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று கோயம்பேடு காய்கறி மற்றும்  மலர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணியில் இருந்து செயல்படத் தொடங்கியுள்ளது.

மேலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

சரக்குவாகனங்களுக்கு இரவு 9 முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback