Breaking News

பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி- தமிழக அரசு

அட்மின் மீடியா
0

அக்டோபர் 1ம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


மேலும் மாணவர்களின் விருப்பத்தின் பேரில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback