இன்று முதல் தமிழகத்தில் வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்