பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு
அட்மின் மீடியா
0
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கடந்த 1992 ம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தனர் அப்போது லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்