வரதட்சணை கொடுமை ! தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 3 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.
அப்பொழுது 110 - விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அவரது அறிவிப்பில் வரதட்சணைச் கொடுமைக்கான தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அதிகரிக்க பரிந்துரை
இதனைபோன்று, பாலியல் தொழிலுக்காக சிறார்களை விலைக்கு வாங்கினால் குறைந்தப்பட்சம் 7 ஆண்டு சிறை.
பெண்களை பின் தொடர்தல் குற்றத்திற்கு தண்டணை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிப்பு.
18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags: தமிழக செய்திகள்