Breaking News

BREAKING NEWS: தமிழகத்தில் இபாஸ் நடைமுறை ரத்து..!

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து..!


இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. 

அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக உத்தரவிட்டுள்ளது. அதில் பலரும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையான இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback