Breaking News

மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம்! - தமிழக அரசு அதிரடி!

அட்மின் மீடியா
0
மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு





மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் மத்திய அரசு மும்மொழி கொள்கையை புதிய கல்வி திட்டத்தின் மூலம் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. 

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்' என உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் 'மாநில அரசுகளில் கல்வி கொள்கையின் அடிப்படையில் புதிய கல்வி திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொள்ள மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

அனைத்து மக்களின் கோரிக்கைகளை ஏற்று புதிய கல்வி கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback