Breaking News

சமூக வலைதள வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்ககோரி வழக்கு - மத்திய மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
சமூக வலைதள வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்ககோரி வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு



சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி  பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருவதாகவும், மேலும்  குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதாகவும் அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை எனவும், திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அம்மனுவில் தெரிவித்திருந்தார்

இந்த மனு தொடர்பான விசாரனை இன்று நடந்தது அப்போது  நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் மத்திய மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback