Breaking News

மாநிலத்துக்குள் மக்கள் செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை கூடாது: மாநில அரசுகளுக்கு !! மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம்

அட்மின் மீடியா
2


இ -பாஸ் தேவையில்லை , எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது - மத்திய அரசு  

மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படுவதால் இனி அந்த நடைமுறை எதற்கு என கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தற்போது மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

2 Comments

  1. நடுவண் அரசின் செயல்பாடுகள் வரவேற்கிறோம்

    ReplyDelete