ஆகஸ்டு 10ம் தேதி கடை அடைப்பு இல்லை: விக்ரமராஜா அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில்
கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி , தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ம்
தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு என்று
வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.
தற்போது இந்த கடை அடைப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்
கிழமை ஒரு நாள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது, அடுத்த வாரம்
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் இடையில் 10 ம் தேதி கடை
அடைப்பு நடத்துவதன் மூலம் பொது மக்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவே
கடை அடைப்பு வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படும் என
விக்கிரமராஜாதெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்