Breaking News

ஆக.,10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பழக்கடைகள் இயங்காது- வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0
கோயம்பேடு சந்தையைத் திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அவர்கள்  இன்று (ஆக.4) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:



கோயம்பேடு மார்கெட்டை திறக்கக் கோரி இரண்டு முறை முதலமைச்சரை சந்தித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகையால், உடனடியாக கோயம்பேடு மார்கெட்டை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள காய்கறி மார்க்கெட், பழக்கடை, பூக்கடைகள் ஆகியவை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அதன் பிறகும் தமிழக அரசு கேயம்பேடு மார்க்கெட்டை திறக்காவிடில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தொடர் போராட்டம் பற்றி ஆகஸ்ட் 10ம் தேதி அறிவிக்கப்படும்.என கூறினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback