Breaking News

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் - கேரள அரசு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.




கேரளாவில் கரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகள் அடுத்த ஓராண்டுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

கேரள அரசின் விதிமுறைகள்:


  • பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப் பட்டுள்ளது. 

  • பொது இடங்கள், பணியிடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுத்துள்ளது.

  • பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும். 

  • திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும். இதில் பங்கேற்பவர்களும் கட்டா யம் முகக் கவசம் அணிய வேண் டும். 6 அடி சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்பட வேண்டும். அனைவரும் கைகளை சுத்தம் செய்துகொள்ள கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.

  • கொரானா நோயாளி அல்லாதவர்களின் இறுதிச் சடங்குகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்ற வேண்டும். 

  • ஊர்வலம், பொதுக்கூட்டம், போராட்டம் போன்ற நிகழ்ச்சி களுக்கு எழுத்துப்பூர்வமாக முன்அனுமதி பெற வேண்டும். இவற்றிலும் கரோனா பாதுகாப்பு விதிகளுடன் 10 பேர் வரை மட் டுமே பங்கேற்க முடியும். 

  • கடைகள், வணிக வளாகங்களில் 20 பேர் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 

  • வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோருக்கு இ-பாஸ் தேவை யில்லை. என்றாலும் இவர்கள் கேரள அரசின் ஜாக்ரதா இணைய தளத்தில் https://covid19jagratha.kerala.nic.in/ உங்கள் பயண விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

  • இந்த விதிகள் 2021 ஜூலை வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

  • இந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். விதிகளை மீறுவோர் கேரள தொற்றுநோய் சட்டம் 2020-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.என கூறப்பட்டுள்ளது.






Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback