Breaking News

நாளை ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குள் வாடகை வாகனங்கள் இயங்க இ- பாஸ் தேவையில்லை!

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரானா  வைரஸ் அதிகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது



குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த முழு பொது முடக்கம் இன்று 05.07.2020  நள்ளிரவோடு முடிவடையும் நிலையில் மதுரையில் மட்டும்  மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் 6ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், 

ஜூலை 6 ம் தேதி அதாவது நாலை முதல்  சென்னை காவல் எல்லைக்குள் வாடகை வாகனங்கள் இயங்க இ- பாஸ் தேவையில்லை. சென்னை உள்ளே வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback