Breaking News

6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலிஸுக்கு தடை

அட்மின் மீடியா
0
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம்  மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
இது பற்றி  மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வந்தது 

மேலும் அதன் பின் வழக்கு சிபிசிஐடி  மாற்றப்பட்டு  கொலை வழக்காக பதிவு செய்யபட்டு தற்போது 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது

இந்நிலையில் திருச்சி, விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர்   ஆகிய 6 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை வித்விதித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காவல்நிலையங்களுக்குள் சென்று பணிபுரிய மட்டுமே பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை எனவும் ,மேலும் ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்தகூடாது என்றும்
பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளை தொடர தடையில்லை
 என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback