Breaking News

பி.எஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை; உச்சநீதிமன்றம் அதிரடி

அட்மின் மீடியா
0
பி.எஸ்.4 ரக வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவு





கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. 

அந்த நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.  மேலும், மறு உத்தரவு வரும்வரை BS-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback