அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று துவக்கம்
அட்மின் மீடியா
0
உத்தர பிரதேச அயோத்தியில் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம்அனுமதி அளித்தது மேலும் அங்கு ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அறக்கட்டளை அமைக்க உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.இதற்கு தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த மாதம் 11-ம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, இன்று ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கவுள்ளது.
கட்டுமான பணிக்கு முன் சிவபெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை காலை 8 மணியளவில் ராம ஜென்மபூமியில் உள்ள குபேர் திலா கோயிலில் சிவனுக்கு ருத்ராபிசேகம் நடத்தப்பட உள்ளதாகவும், இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த பூஜைக்கு பின்னர் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் ராமர் கோயில் அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்