ஊரடங்கு நீட்டிப்பு என வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!" - முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது என சமூகவலைதளங்களில் வெளியான செய்திக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல செய்திகள் கடந்த 2 தினங்களாக வந்த வண்ணம் இருந்து
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என வெளியான செய்தி தவறானது என தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
அதில் எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்துள்ளார்
எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 12, 2020
Tags: தமிழக செய்திகள்