Breaking News

நான் இஸ்லாமியனாக மாறிய தருணம் குறித்து யுவன் சங்கர் ராஜா : அல் குர்ஆர் ஏன் இவ்வளவு கண்டிப்பாக உள்ளது:

அட்மின் மீடியா
0
நான் இஸ்லாம் மதத்தைத் தேர்ந்தெடுத்த தருணம் எது என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு பதில் அளித்த வீடியோவை அவரது மனைவி தனது இன்ஸ்டாவில்  பகிர்ந்துள்ளார்.



சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார் யுவன் சங்கர் ராஜா அவர்களின்  மனைவி ஷாஃப்ரூன் நிஷா அப்போது பலரும் யுவனின் மதம் மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். 

அதற்குத் தகுந்த பதில் அளித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து யுவனிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், அதற்கு அவரே பதிலளிப்பார் என்று ஷாஃப்ரூன் நிஷா அறிவித்தார். 

அதில் சில கேள்விகளுக்கு யுவன் வீடியோ வடிவில் பதிலளித்தார். 

நேற்று  05.06.2020 எந்த ஒரு சம்பவம் இஸ்லாம் மதத்துக்கு யுவன் மாற காரணமாக இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்கள். அந்தக் கேள்விக்கு யுவன் வீடியோ வடிவில் பதில் அளித்ட்\துள்ளார்


அந்த வீடியோவில் எந்த தருணத்தில் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்டிருந்தீர்கள். எந்த தருணம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அது ஒரு பயணம் என்று தான் சொல்லவேண்டும். நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே அதாவது என் அம்மா உயிருடன் இருக்கும்போதே இதற்கான தேடல் என்னுள் தொடங்கியது.

2012 உலகம் அழியப்போகிறது, மாயன் காலண்டர் XYZ என்றெல்லாம் அப்போது சிலர் சொல்லிவந்தார்கள். இது குறித்து எனது அம்மாவிடமும் நான் விவாதிப்பேன் அப்படி ஒவ்வொன்றாக தேடி தேடி ஒரு கட்டத்தில் குர்ஆனை எடுத்து படித்தேன். முதன்முறை அதை படிக்கும்போது அதில் வார்த்தைகள் மிகவும் கண்டிப்புடன் இருந்தன. ஏன் இவ்வளவு கண்டிப்பான வார்த்தைகளுடன் இருக்கின்றன என்று எனக்கு தோன்றியது.

எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உள்ளார் அதில் ஒரு இஸ்லாமிய   நண்பர்  மெக்கா சென்றுவிட்டு வந்திருந்தார் அவர் என்னிடம் ஒரு தொழுகை விரிப்பு ஒன்றை கொடுத்து உங்களுக்கு மனம் சோர்வாக இருக்கும் தருணங்களில் இதில் அமருங்கள் என்று கூறினார்.


 ஒருநாள் என் சகோதரரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு அம்மாவைப் பற்றி சென்றது. அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசமாகிவிட்டேன். உடனே எனது அறைக்கு சென்றேன் அப்போது அந்த  விரிப்புதான் என் கண்ணில் பட்டது. உடனே ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவினேன் நான் அதிகம் அழுத்தினால் எனது முகத்தை கழுவினேன்

அப்போது என் போனில் ஒரு மெசேஜ் வந்தது. ஒரு முஸ்லிம் நண்பர் அதை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் ஒரு வானத்தின் படம் இருந்தது. இதில் உனக்கு என்ன தெரிகிறது என்று கேட்டேன். அதில் ‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்டுள்ளது என்று சொன்னார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த விரிப்பில் அமர்ந்து என்னை அறியாமல் அழுதேன்.தலையை கீழே வைத்து என் பாவத்தை மன்னித்து விடு இறைவா என்று என்னை அறியாமல் சொன்னேன். அதுதான் ஒரு திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.
 

பிறகு மீண்டும் குர்ஆனை எனது மொபைலில் எடுத்து படித்தேன். அப்போதும் கண்டிப்பான வார்த்தைகளுடனே இருந்தது. பிறகுதான் புரிந்தது. இது இறைவனுடைய வார்த்தைகள். அது அப்படித்தான் இருக்கும் என்று"இவ்வாறு யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்



Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback