Breaking News

யானை கொல்லப்பட்டது எப்படி? கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!!

அட்மின் மீடியா
0
கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.



கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று காலை ஒருவர் கைதானார். அவர் வில்சன் என்றும் அவர் வெள்ளியார் பகுதியில் இவர் விவசாய பணிகளை செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. 

யானை அன்னாசி பழத்தை சாப்பிட்டு அதில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தேங்காயில் வைக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து யானை காயமுற்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும் வில்சன் அளித்த வாக்குமூலத்தில், இது வயலில் வைத்த பொறி என்று விசாரணையில் கூறி உள்ளார். வில்சன் வேலை பார்க்கும் வயலில் பன்றி தொல்லை அதிகமாக இருந்து உள்ளது. வயலில் பயிர்களை பன்றிகள் நாசம் செய்துள்ளது. இதனால் பன்றிகளை கொல்வதற்காக வில்சன் பொறி அமைத்து இருக்கிறார். பல இடங்களில் இந்த முறை கடைபிடிக்கப்படும். அப்படித்தான் இந்த பொறியை வைத்தோம். பன்றிக்கு வைத்த பொறியில் யானை சிக்கிவிட்டது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்றுள்ளனர். இந்த வழக்கில் வில்சன் கூறிய இன்னும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback