பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு மக்கள் முன் உரை..
அட்மின் மீடியா
0
இன்று மாலை 4 மணிக்கு மக்கள் முன் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.
கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்குஅறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் இன்றுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்துமத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள து.
இந்த உத்தரவில்,
பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜூலை 31 வரை தடை
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை
மெட்ரோ ரயில் தற்போதைக்கு இயங்காது
சினிமா ஹால், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார், அசெம்பிளி ஹால் மற்றும் இதே போன்ற இடங்கள் மூடப்பட்டிருக்கும்.-
அனைத்து உள்நாட்டு விமானங்களும் பயணிகள் ரயில்களும் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வழியில் அனுமதிக்கப்பட்டுள்ளனஎன பலதளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார் என தகவல்கள் வெளியாகிறது.
Tags: இந்திய செய்திகள்