செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கும், அரக்கோணத்தில் இருந்து கோயம்புத்தூர்க்கும் ரயில் 12 ம் தேதிமுதல்
அட்மின் மீடியா
0
செங்கல்பட்டிலிருந்து வரும் 12 ஆம் தேதி முதல் ரயில் இயக்க ரயில்வே அனுமதி
திருச்சிலிருந்து, செங்கல்பட்டு வரை வரும் 12 -ம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி கொடுத்துள்ளது.
இந்த, ரயில் அரியலூர் ,விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும். இந்த ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என்றும்
அதே போல் அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 -ம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடக்கம்
Tags: தமிழக செய்திகள்