Breaking News

வாகனா மித்ரா திட்டம்: ஆந்திராவில் ஆட்டோ , டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் :ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 


ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான 262 கோடி ரூபாய் மதிப்பிலான ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறுவதற்கும், வாகன காப்பீடு பெறவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.அவ்வாறு செய்யாவிட்டால் தினந்தோறும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவித்து இருந்தனர். அவர்களின் துயர் துடைக்கவே கடந்த ஆண்டு முதல் இத் திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு ஆனலைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback