10-ம் வகுப்புத் தேர்வு வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 11-க்கு ஒத்திவைப்பு
அட்மின் மீடியா
0
தமிழக அரசு ஜூன் 15-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்ப்ட்டது
அந்த மனுவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு பொதுத்தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற உள்ளதாக அறவிக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. மேலும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனவே கொரானா பரவல் குறைந்தபின் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தலாம்" எனக் கருத்து தெரிவித்தனர்.
மேலும் 10 ம் வகுப்பு பொது தேர்வை ஜூலை 2 ஆவது வாரத்தில் நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசின் கருத்தைக் கேட்க வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.
பிற்பகல் 2;30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டால், அது பேராபத்தாக முடியும். மேலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என்று விளக்கம் அளித்தார்
இதனை ஏற்காத நீதிபதிகள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு