Breaking News

அரபிக்கடலில் வலுவடைகிறது புதிய புயல்.. தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

அட்மின் மீடியா
0
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு



இந்த புயல் மேற்கு கடற்கரையை ஒட்டி, வடக்கு நோக்கி நகரும்.அதன் காரணமாக, தென் கிழக்கு , தென் மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் இந்த புயல் அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குஜராத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது



Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback