Breaking News

FACT CHECK: அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் சிவலிங்கம் கிடைத்ததா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அயோத்தியில் ராம்ஜென்ம பூமியில் தோண்டி எடுக்கப்பட்ட 5 அடி சிவலிங்கம். என ஒரு புகைபடத்தை பலரும் சமூக வலைதளங்களில்  ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


அந்த புகைபடத்தில் உள்ள சிவலிங்கம் அயோத்தியில் எடுக்கபட்டது இல்லை

மேலும் அந்த சிவலிங்கம் கடந்த 2016 ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மதியா தேவி கோவிலில் இருந்து எடுக்கபட்டது


கோவிலின் பூசாரி ராஜ்கிஷோர் சுக்லா  இது குறித்து கூறும் போது : இந்த மதியா கோவில் பிரிட்டிஷார் காலத்தில் கட்டபட்ட கோவிலாகும் மேலும் அந்த சிவலிங்கம் கோவிலை சீரமைக்க தோண்டும் போது எடுக்கப்பட்டது என கூறியுள்ளார்


உண்மை இப்படி இருக்க ஆனால் சிலர் அந்த சிவலிங்கம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் போது கிடைத்தது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback