ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி
அட்மின் மீடியா
0
ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மே 25 ஆம் தேதி, ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் காலை 9 மணிமுதல் 11 மணிவரை 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு மதுரை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விவாதித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறினார்கள். மேலும், அந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது
Tags: தமிழக செய்திகள்