ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? மருத்துவ குழுவுடன் இன்று முதல்வர் ஆலோசனை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மே 31-ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? அல்லது மே 31ஆம் தேதியுடன் கைவிடப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார் .மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். அந்த கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது, அல்லது மேலும் தளர்வு வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. மருத்துவர் குழு எந்த மாதிரியான பரிந்துரைகளை வழங்க உள்ளது என்பது தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி