Breaking News

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யபட்டுவிட்டது இனி 100 மற்றும் 112 எண்ணில் அழைக்கலாம்

அட்மின் மீடியா
0
பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. 




BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடபோன்  மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைபேசியில் இருந்து காவல் அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைக்க முடியவில்லை 


எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள காவல்துறை சார்பில் 22.05.2020 அறிவிக்கபட்டது


இந்த நிலையில் இன்று 24.05.2020  பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியிலிருந்து 100,112ஐ இனி அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback