Breaking News

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இருக்குமா.? - முதலமைச்சர் இன்று ஆலோசனை...

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இருக்குமா.? - தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை..




கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 


அதன்படி, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைவான மற்றும் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலும் தற்போதைய ஊரடங்கு நிலை தொடரும் என நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கிடையே கொரோனா பரவும் நிலையை பொருத்து எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி முடிவெடுக்க மூத்த அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவை தமிழக அரசு நியமித்தது.

அந்தக் குழு அதன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தெரிவிக்க உள்ளார்கள் இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முடிவு எடுக்க உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback