ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் நிலை என்ன? இந்திய ரயில்வே விளக்கம்
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்து விடும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் தங்கியிருந்த மக்கள் ஏப்ரல் 15ம் தேதி முதல் சொந்த ஊருக்கு ரயில்கள் மூலம் திரும்பி விடலாம் என்பதால் முன்பதிவு செய்திருந்தார்கள்
இந்த நிலையில் மத்திய அரசு மே மாதம் 3 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ளதால் 3 ம்தேதி வரை ரயில்கள் இயங்க வாய்ப்பில்லை மேலும் இந்தியன் இரயில்வே துறை முன்பதிவு செய்த நபர்களின் பணத்தை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்கள் யாரும் டிக்கெட்டை ரத்து செய்ய தேவையில்லை. புக் செய்தவர்களின் முழு பணமும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று இரயில்வே துறை அறிவித்துள்ளது.
For trains cancelled by Indian Railways, full refund will be provided automatically by IRCTC. Users need not cancel their e-tickets. Full fare will be credited back into users accounts from which payment was made.— IRCTC (@IRCTCofficial) April 14, 2020
Tags: முக்கிய அறிவிப்பு