Breaking News

ஊரடங்கு நீடிக்கபடுமா? நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகின்றது

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கொரோனா பரவலை தடுக்க அமைக்கப்பட்ட 19 மருத்துவ குழு நிபுணர்கள் இன்று தமிழக முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது

இந்நிலையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது



முன்னதாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback