வீடு தேடி வரும் 1000 ரூபாய் :முதலமைச்சர் பழனிசாமி
அட்மின் மீடியா
0
இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொடுர கொரோனாவின் தாக்கத்தை பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
மக்கள் தெளிவாக ஒன்றை புரிந்து கோள்ளவேண்டும் மக்களை துன்புறுத்த 144 தடை உத்தரவு போடவில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்பட்டுள்ளது. மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும் என கூறினார்
இந்த மாதம் இறுதி வரை இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும். மேலும் டோக்கன் வழங்கப்படும் போதே நிவாரண தொகையான ஆயிரம் ரூபாய் 7ம் தேதி முதல் வழங்கப்படும். என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Tags: முக்கிய செய்தி