குவைத்தில் வானம் பூமிக்கி ரொம்ப அருகில் வந்ததா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
குவைத்தில் வானம் பூமிக்கு ரொம்ப அருகில் வந்து உள்ளது.. இது கண்ட மக்கள் பீதியில் உள்ளார்கள்.. கொரோனா அடுத்து எதோ ஒரு மர்மம் நடக்க போகுது என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
கொரோனா பாதிப்பால் குவைத் நாட்டில் மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அதனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நபர்கள் தங்களது பால்கனியில் இருந்து ஒலி எழுப்ப அருகில் உள்ள அனைத்து குடியிறுப்பு வாசிகளும் சேர்ந்து ஒலி எழுப்ப அதை வீடியோ எடுத்து சமூகவளைதளத்தில் பதிவிட்டார்கள்.
மேலும் அங்கு கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் உள்ளது அவ்வப்போது மழையும் பொழிந்து வருகின்றது
இயற்கையாக வானம் மேக மூட்டமாக காணப்பட்டால் சில நேரங்களில் தாழ்வாக வரும் அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் குறைந்தபட்சம் 20 மாடி 25 மாடிகளை கொண்டது
ஆகையால அதில் இருந்து பார்கும் போது மேகங்கள் இன்னும் அருகில் இருப்பது போன்று தோற்றம் அளிக்கும்
இதை யாரோ ஒருவர் வானத்தில் இருந்து கொரோனா தாக்க போகின்றது, உலகம் அழிய போகின்றது, கியாமத் நாள் நெருங்கி விட்டது என பொய்யாக பரப்புகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி