Breaking News

கொரோனாவிற்க்கு ஒரே தடுப்பு மருந்து தனிமைப்படுவது மட்டுமே : தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 30) முதல்வர் பழனிசாமி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர், முதல்வர் பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



கொரோனா தொற்றுக்கு தற்போதைய ஒரே தடுப்பு மருந்து தனிமைப்படுவது மட்டும்தான் மேலும் இதுவரை இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை 

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். மாவட்ட வாரியாக நிலைமையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சவாலான நிலையை தமிழக அரசு இதுவரை எதிர் கொண்டதில்லை.

வெளியூர் செல்ல விரும்புகின்றவர்கள் திருமணம் மற்றும் இறப்புக்கு மட்டுமே வெளியூர் செல்ல அனுமதிஅளிக்கபடும் அதற்க்கு தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் அந்த பகுதி வட்டாச்சியர்களிடம் அனுமது பெற்று செல்லலாம் என விளக்கினார்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback