டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிக் ஜமாத் மாநாட்டில், 1000-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டதாக தெரிந்துள்ளது
இவர்களில் பலா் தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துவிட்டனர். அவர்களில் பலர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது தற்போது தெரியவருகிறது.
இதில் பலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்புகொள்ள முடிந்துள்ளது. பலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்புகொள்ள முடியவில்லை
தொடர்புகொள்ள முடியாதவர்கள் தாமாகவே முன் வந்து மாவட்ட தாங்களாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இவர்களது குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும். எனவே, இவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்
இவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இவர்களது குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும். எனவே, இவர்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்
Tags: முக்கிய அறிவிப்பு