Breaking News

கோபாலபட்டினம் ஷாஹின்பாக்

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கூட்டமைப்பு சார்பில்  தொடர் காத்திருப்புப் போராட்டம் 01.03.2020 காலை 11.00 மணி முதல் தொடங்கியது. 
தொடர் தர்ணா போராட்டம் இன்று 2 ம் நாளாக தொடர்ந்து நடைபெறுகின்றது.


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் உள்ளார்கள்

Tags: தமிழக ஷாஹீன்பாக்

Give Us Your Feedback